சந்திரிகா அவசர ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கை விமானப் படைத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தி போர் விமானங்களை விடுதலைப் புலிகள் அழித்ததைத்தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகளின் உயர் மட்ட அவசரக் கூட்டத்தை அதிபர் சந்திரிகா செவ்வாய்க்கிழமை கூட்டிஆலோசனை நடத்தினார்.
எப்பாடுபட்டாவது விமான நிலையத்தை பாதுகாப்பது என்று இக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
புலிகளைத் திருப்பித் தாக்க வசதியாக விமான நிலையத்தை சுற்றி 15 கி.மீ. தூரத்துக்கு ஊரடங்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகர் முழுவதும் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புலிகளின் புதிய வகையான தாக்குதலால் இலங்கை ராணுவம் நிலைகுலைந்துள்ளது. விமான நிலையத்தை சுற்றிஒரே குண்டுச் சத்தமும் புகை மூட்டமுமாக உள்ளது. விமான நிலையத்துக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications