தற்கொலைப் படையில் இருந்த 13 பேர்
கொழும்பு:
இலங்கை சர்வதே விமான நிலையத்தில் தாக்குதல் தொடுத்த விடுதலைப் புலிகளின் குழுவில் 13 பேர் இருந்ததுதெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் தற்கொலைப் படை பிரிவைச் சேர்ந்தவர்கள்.
8 ராணுவ விமானங்களுடன் 5 பயணிகள் விமானங்களும் இந்தத் தாக்குதலில் சேதமைடந்தன.
புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே சுமார் 6 மணி நேரம் சண்டை நீடித்தது. கொல்லப்பட்ட 9 புலிகளுடன்வந்த 4 புலிகள் தலைமறைவாகிவிட்டனர். இவர்களைத் தேடும் பணி நடக்கிறது. கொழும்பு முழுவதும் தேடுதல்வேட்டை நடக்கிறது.
இந்தத் தாக்குதலையடுத்து கொழும்பு விமான நிலையம் மூடப்பட்டதாக சர்வதே அளவில் இலங்கை அரசுசெய்தியை அனுப்பியது. இதைத் தொடர்ந்து இலங்கைக்கு வர இருந்த அனைத்து சர்வதேச விமானங்களையும்அந்தந்த நாடுகள் ரத்து செய்துவிட்டன.
புலிகளின் தாக்குதலைத் தொடங்கியபோது சில விமானங்கள் கிளம்புவதற்குத் தயாராக இருந்தன. விமானங்கள்மீது புலிகளின் துப்பாக்கிக் குண்டுகள் பட்டுச் சிதறிய சத்தம் கேட்டவுடன் பயணிகள் அலற ஆரம்பித்தனர்.இதையடுத்து அனைவரும் கீழிறக்கப்பட்டு பாதுகாப்பாக விமான நிலையத்துக்கு வெளியே அழைத்துச்செல்லப்பட்டனர்.
புலிகளும், ராணுவத்தினரும் ஒருவர் மீது ஒருவர் சுட்டுக் கொண்டபோது தங்கள் தலைக்கு மேல் பல குண்டுகள்பறந்து சென்றதாக பல பயணிகள் கூறினர். ஆனால், அதிர்ஷ்டவசமாக எந்தப் பயணியும் காயமடையவில்லை.
சண்டை முடிந்த பின்னர் பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் அனிருந்த ரத்வதேயும் முப்படைகளின் தலைவர்களும்விமான நிலையத்தைப் பார்வையிட்டனர்.












Click it and Unblock the Notifications