ஜெ. தலைமையில் நடந்தது அமைச்சரவைக் கூட்டம்
சென்னை:
சென்னையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று செவ்வாய்கிழமை காலைநடந்தது. கூட்டத்தில் அனைத்து தமிழக அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத் தொடரில் பட்ஜெட் சமர்ப்பிப்பது தொடர்பாகவும், திமுக ஆட்சிக் காலத்தில் இருந்த மாநிலத்தின்நிதிநிலைமை குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
மேலும், கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பிறகும், அதிமுகவிலிருந்து பாமக விலகிச் சென்ற பிறகும்நடக்கும் முதல் அமைச்சரவைக் கூட்டமும் இதுதான். எனவே, சட்டசபையில் எதிர்க்கட்சிகள் எழுப்பும்சர்ச்சைகளுக்குப் பதிலடி கொடுக்க தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகச்கூறப்படுகிறது.
திங்கள்கிழமையே இந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், மறைந்த நடிகர் சிவாஜிகணேசனின் இறுதி ஊர்வலம் நடந்த தென் சென்னைப் பகுதிகளில் கூட்டம் அலைமோதியதால், முதல்வர்ஜெயலலிதாவால் தலைமைச் செயலகம் செல்ல முடியவில்லை.
இதனால், அமைச்சரவைக் கூட்டம் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளும் திங்கள்கிழமை ஒத்தி வைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications