அவசர பெண் போலீஸ் 1091
சேலம்:
அவசர போலீஸ் பிரிவு இருப்பதைப் போல, பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துகளைத் தவிர்க்க அவசர பெண்போலீஸ் பிரிவும் துவங்கப் பட்டுள்ளது.
இவற்றைத் தடுக்க, எம்.ஜி.ஆர். ஆட்சியில் முதன்முதலில் சென்னையில் பெண் போலீஸ் ஸ்டேஷன் திறக்கப்பட்டது.பின்னர் முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் தமிழகமெங்கும் பெண் போலீஸ் ஸ்டேஷன்கள் திறக்கப்பட்டன.
இதன் அடுத்த கட்டமாக தற்போது தனியாக அவசர பெண் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க அரசுமுடிவெடுத்துள்ளது. அதன்படி அனைத்து பெண் போலீஸ் ஸ்டேஷனிலும் அந்தப் படைக்கு தனி ஜீப், தனி போன்நம்பர் கொடுக்கப்படும்.
அவசர போலீசுக்கு 100 மற்றும் தீயணைப்புத் துறைக்கு 101 என்பது போல், தமிழகம் முழுவதும் ஒரே மாதிரிடெலிபோன் நம்பர் அவசர பெண் போலீஸ் ஸ்டேஷனுக்கும் தனி டெலிபோன் நம்பர் வழங்கப்படும்.
இந்த நம்பர் விரைவில் பத்திரிக்கைகளிலும், டிவிக்களிலும் விளம்பரப் படுத்தப்படும். அதன்படி எந்நேரமும்இலவசமாக இந்த நம்பரில் அழைத்து பெண்கள் தங்கள் அவசரப் பிரச்சனைகளை தெரிவிக்கலாம்.
இத்திட்டத்தின்படி, முதல் அவசர பெண் போலீஸ் ஸ்டேஷன் நேற்று சேலத்தில் தொடங்கப் பட்டது. இதற்கு 1091என்ற டெலிபோன் நம்பரும் பெறப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அமைக்கப்படவிருக்கும் அவசர பெண் போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் இதே எண்ணையேபயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications