மத்திய, மாநில அரசு ஊழியர்கள் நாளை ஸ்டிரைக்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மத்திய, மாநில அரசு நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 1 கோடி ஊழியர்கள் புதன்கிழமை வேலை நிறுத்தத்தில்ஈடுபடவுள்ளனர்.

மத்திய-மாநில அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு, அகில இந்திய மாநில அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு ஆகியவைவெளியிட்ட அறிக்கையில் இதுகுறித்து கூறப்பட்டுள்ளது.

அரசுத் துறைகளை தனியார் மயமாக்குவதையும், ஆள்குறைப்பு செய்வதையும் மத்திய அரசு உடனடியாக நிறுத்தவேண்டும். மத்திய அரசின் இந்த முதலாளித்துவக் கொள்கை மூலம், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நாட்டை விற்கமத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத்தான் தெரிகிறது.

இவற்றைக் கண்டித்து, மத்திய-மாநில அரசு ஊழியர்கள் சுமார் 1 கோடி பேர், புதன்கிழமை 1 நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். அரசுத் துறைகளில் இதுபோன்ற பெரிய அளவிலான வேலை நிறுத்தம் இதற்கு முன்நடந்தது இல்லை என்று சொல்லுமளவுக்கு, தீவிர வேலை நிறுத்தப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபடப் போவதாகக்கூறப்படுகிறது.

இந்த வேலை நிறுத்தம் மத்திய அரசுக்கு ஒரு எச்சரிக்கையாகவும், மிகப் பெரும் சவாலாகவும் இருக்கும் என்றுஅந்தக் கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிரானகொள்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் அந்த அறிக்கையில் மத்திய அரசுக்கு எச்சரிக்கைவிடுக்கப்பட்டுடள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+