For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடலூரில் தப்பிய கைதி திருச்சியில் கைது

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

கடலூரில் போலீஸ் பாதுகாப்பிலிருந்து சமீபத்தில் தப்பி ஓடிய ஒரு கைதி, ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சிபோலீசிடம் மாட்டிக் கொண்டார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சி போலீசார் ரோந்து சென்று கொண்டிருந்தபோது, பஸ் ஸ்டாண்டில்சந்தேகத்திற்கிடமான ஒரு நபர் நிற்பதைக் கண்டனர். போலீசாரைக் கண்டதும் அவர் நழுவி ஓடப் பார்த்தார்.

உடனே அவரை விரட்டிப் பிடித்தனர் போலீசார். திருடப்பட்ட சில டி.விக்களையும் 17 பவுன் நகைகளையும்அவரிடமிருந்து போலீசார் கைப்பற்றினர்.

மேலும் அவரைத் தோண்டித் தோண்டி விசாரித்த போது, சமீபத்தில் அவர் கடலூர் போலீசாரிடமிருந்து தப்பியகைதி என்பது தெரிய வந்தது.

வீடுகளில் பூட்டை உடைத்துக் கொள்ளையடித்ததாக அவர் மேல் 6 வழக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X