பாதாள சாக்கடை வழியே ஊடுறுவிய புலிகள்
கொழும்பு:
பலத்த ராணுவ பாதுகாப்பில் இருக்கும் கடுநாயகே ராணுவ விமானத்தளத்துக்குள்பாதாள சாக்கடை வழியாக விடுதலைப் புலிகள் ஊடுருவி இருக்கலாம் எனக்கருதப்படுகிறது.
ராணுவம், போலீசார், கண்காணிப்பு கேமராக்கள், ரோந்து வாகனங்களையும் மீறிபுலிகள் எப்படி உள்ளே நுழைந்தனர் என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல்இல்லை. அரசும், ராணுவமும் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.
அவர்கள் கடுநாயகே விமானத் தளத்தின் கழிவு நீர் செல்லும் கால்வழியாகத்தான்விமானத்தளத்திற்குள் நுழைந்திருக்க வேண்டும் என்று உளவுத்துறையினர்கருதுகின்றனர்.
கடுநாயகே விமானத்தளத்தின் கழிவுநீர் கால்வாய், விமான நிலையத்தை இணைக்கும்நெடுஞ்சாலையில் கீழே உள்ளது.
இந்த கழிவுநீர் செல்லும் கால்வாய் சில காலமாக பயன்படுத்தப்படாமால் இருந்தது.விடுதலை புலிகளின் தற்கொலை படையினர் அதன் வழியே தவழ்ந்து வந்து தான்விமானத் தளத்திற்கும், சர்வ தேசவிமான நிலையத்திற்குள்ளும் நுழைந்திருக்கவேண்டும் என உளவுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
விடுதலை புலிகளின் தற்கொலை படையினர் நள்ளிரவு 12 மணிக்கு மேல் அந்த கழிவுநீர் செல்லும் கால்வாயின் உள்ளே இறங்கி பல மணி நேரம் தவழ்தே முன்னேறி வந்துவிமானத்தளத்தை அடைந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் விமானத்தள தாக்குதல் சம்பவத்திற்கு விடுதலை புலிகள் பொறுப்புஏற்றுள்ளனர். இது குறித்து விடுதலை புலிகளின் வாய்ஸ் ஆஃப் டைகர்ஸ் வானொலிகூறுகையில், எங்கள் வீரர்கள் விமான நிலைய தாக்குதலை வெற்றிகரமாக செய்துமுடித்து உள்ளனர். ராணுவத்திற்கு சொந்தமான 8 விமானங்களை அழித்துள்ளனர் என்றுதெரிவித்துள்ளது.