பொய் வழக்குகள் போடுகிறார் ஜெயா: கருணாநிதி குற்றச்சாட்டு
சென்னை:
சுதாகரன் கைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின்மூலம் அ.தி.மு.க. அரசு எவ்வாறு பொய் வழக்குகள் போடுகிறது என்ற உண்மைவெளியுலகுக்குத் தெரிய வந்துள்ளது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இந்நிலையில் சலாவுதினின் மனைவி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல்செய்துள்ளார். மேலும் ஜெயலலிதாவின் இரண்டு செயலாளர்களுடனும், போதைப்பொருள் வழக்கை விசாரித்து வரும் அதிகாரிகளுடன் தன் கணவர் தொலை பேசிமூலம் நடத்திய பேச்சுவார்த்தையை ஒலிப்பதிவு செய்து அந்த கேசட்டையும்நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
தன் கணவர் மீது போடப்பட்ட வழக்குகள் பொய்யானைவை என ஜெயலலிதாவின்செயலாளர்கள் ஒப்புக் கொண்டுள்ள உண்மை கேசட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதுஎன்று அவர் கூறி உள்ளார்.
இது குறித்து தி.மு.க தலைவர் கருணாநிதியின் கருத்தை செவ்வாய்க்கிழமை நிருபர்கள்கேட்டனர். அப்போது கருணாநிதி கூறியதாவது:
உச்ச நீதிமன்றத்தில் சலாவுதினின் மனைவி தாக்கல் செய்துள்ள மனு அ.தி.மு.க அரசுஎவ்வாறு பொய் வழக்குகள் போடுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு.
இந்த மனுவுடன் வழக்கு பொய் வழக்கு என்பதற்கு ஆதாரமாக கேசட்டுகளும்சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன. இது குறித்து நான் ஆங்கில நாளிதழில் வந்த செய்திமூலம்தான் தெரிந்து கொண்டேன்.
அந்த செய்தி மர்ம நாவலை படிப்பது போல் இருந்தது. சலாவுதீனின் உயிருக்கும்,அவரது சகோதரர் மொய்தீனின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுமோ என்ற பயம் உள்ளது.அவர்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் உரியவர்கள்தான் அதற்கு பொறுப்பேற்கவேண்டும் என்றார் கருணாநிதி.
-
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications