தஞ்சை பூங்கா நுழைவு வாயிலுக்கு சிவாஜி பெயர்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை கூடிய நகராட்சி மன்ற கூட்டத்தில் சிவகங்கைபூங்காவில் உள்ள அலங்கார வளைவு நுழைவு வாயிலுக்கு செவாலியே சிவாஜிவாயில் என பெயரிடுவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சனிக்கிழமை இரவு மரணமடைந்தார். அவருக்குநினைவகம் அமைக்க வேண்டும் என்றும், அவர் பெயரில் விருது வழங்க வேண்டும்என்றும், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும் பல கோரிக்கைகள்எழுப்பபட்டு உள்ளன.

இந்நிலையில் தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளபூங்காவின் அலங்கார நுழைவு வாயிலுக்கு செவாலியே சிவாஜி வாயில் என்றுபெயரிடுவது என தஞ்சாவூர் நகராட்சி மன்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இந்த அலங்கார நுழைவு வாயில் அமைப்பதற்கு சிவாஜி நிதி உதவி செய்தார். அந்தவாயிலையும் அவர்தான் திறந்து வைத்தார்.

நுழைவு வாயிலுக்கு சிவாஜியின் பெயரிடுவது என்பது குறித்த தீர்மானம் நகர மன்றதலைவர் சி.இறைவன் தலைமையில் கூடிய நகர மன்ற கூட்டத்தில்நிறைவேற்றப்பட்டது.

சிவாஜிகணேசன் மறைவிற்கு மன்ற கூட்டத்தில் இரங்கலும் தெரிவிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+