தஞ்சை பூங்கா நுழைவு வாயிலுக்கு சிவாஜி பெயர்
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை கூடிய நகராட்சி மன்ற கூட்டத்தில் சிவகங்கைபூங்காவில் உள்ள அலங்கார வளைவு நுழைவு வாயிலுக்கு செவாலியே சிவாஜிவாயில் என பெயரிடுவது என்று முடிவு எடுக்கப்பட்டது.
இந்நிலையில் தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளபூங்காவின் அலங்கார நுழைவு வாயிலுக்கு செவாலியே சிவாஜி வாயில் என்றுபெயரிடுவது என தஞ்சாவூர் நகராட்சி மன்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இந்த அலங்கார நுழைவு வாயில் அமைப்பதற்கு சிவாஜி நிதி உதவி செய்தார். அந்தவாயிலையும் அவர்தான் திறந்து வைத்தார்.
நுழைவு வாயிலுக்கு சிவாஜியின் பெயரிடுவது என்பது குறித்த தீர்மானம் நகர மன்றதலைவர் சி.இறைவன் தலைமையில் கூடிய நகர மன்ற கூட்டத்தில்நிறைவேற்றப்பட்டது.
சிவாஜிகணேசன் மறைவிற்கு மன்ற கூட்டத்தில் இரங்கலும் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications