நிபந்தனை ஜாமீனில் விடுதலை ஆனார் ரங்கநாதன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

6வழக்குகள் தொடர்பாக 54 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த த.மா.கா. ஜனநாயக பேரவை எம்.எல்.ஏ.ரங்கநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டது.

முன்னாள் நீதிபதியின் மகனிடம் தேர்தல் நிதி கேட்டு மிரட்டியது உள்ளிட்ட 6 வழக்குகள் இவர் மீது பதிவுசெய்யப்பட்டது. பின்னர் கடந்த மே மாதம் 30ம் தேதிஅவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

6 வழக்குகளில் 4 வழக்குகளில் இவருக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்திருந்தது.

இந்நிலையில் திரு.வி.க.நகரைச் சேர்ந்த உ.ஷாராணி என்ற பெண்ணை துப்பாக்கி காட்டி மிரட்டியதாகதொடரப்பட்ட வழக்கிலும், செம்பியம் திருமூர்த்தி நிலத்தகராறு வழக்கிலும் ரங்கநாதனுக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று ரங்கநாதன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மலை சுப்ரமணியன் ரங்கநாதனுக்கு ரூ 10,000 சொந்தஜாமினிலும், அதே தொகைக்கு இரு நபர் ஜாமீனிலும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

மேலும் ரங்கநாதன் திருச்சியில் தங்கி இருக்க வேண்டும். தினமும் ஜுடிஷியல் நீதிமன்றத்தில் ஆஜராகிகையெழுத்திட வேண்டும். விடுமுறை நாட்களில் கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்என்று நிபந்தனை விதித்தார்.

ரங்கநாதன் மீது தொடரப்பட்டு இருந்த 4 வழக்குகளில் அவருக்கு முன்னரே நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுஉள்ள நிலையில் மேலும் 2 வழக்குகளிலும் நிபந்தனை ஜாமீன் கிடைத்து இருப்பதை அடுத்து 54 நாட்கள்சிறைவாசத்திற்கு பிறகு ரங்கநாதன் சிறையில் இருந்து விடுதலை ஆனார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+