எம்.ஜி.ஆர். சமாதி அருகே சிவாஜிக்கு நினைவிடம்: அரசு அனுமதிக்குமா?
சென்னை:
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு எம்.ஜி.ஆர். சமாதி அருகே நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்கித் தருமாறுதமிழக முதல்வருக்கு அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
நடிப்புலக மேதை சிவாஜி கணேசனுக்கு அரசு சார்பில் நினைவிடம் அமைக்க வேண்டும். அதற்கான இடத்தைஎம்.ஜி.ஆர். சமாதி அருகில் ஒதுக்க வேண்டும்.
தாதா சாஹேப் பால்கே விருது பெற்ற சிவாஜிக்கு இந்தியாவின் உயரிய விருதான "பாரத் ரத்னா" விருது வழங்கிக்கெளவிக்க வேண்டும்.
சிவாஜி பெயரில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்க வேண்டும்.
சிவாஜி இறந்த செய்தி கேட்டு உயிர் துறந்த 3 பேர் குடும்பத்துக்கு ரசிகர் மன்றம் சார்பில் நிதியுதவி வழங்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், சிவாஜிக்கு நினைவிடம் கட்ட இடம் ஒதுக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று மட்டுமே ஜெயலலிதாஅறிவித்துள்ளார். அவ்வாறு இடம் ஒதுக்கினாலும் கூட எம்.ஜி.ஆர். சமாதி அருகே ஒதுக்கப்படுமா என்பதுசந்தேகமே.












Click it and Unblock the Notifications