கருணாநிதியைப் பாதுகாக்க ஆரம்பித்தது "கறுப்பு பூனை" படை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியை கறுப்புப் பூனை படையினர் புதன்கிழமைதொடங்கினர்.
இதையடுத்து, கருணாநிதிக்கு மத்திய அரசின் "இசட் பிளஸ்" பாதுகாப்பு வழங்கப்படும் என்று மத்திய உள்துறைஅமைச்சர் அத்வானி அறிவித்தார்.
இதையடுத்து 60 பேர் கொண்ட கறுப்புப் பூனை படையினர் நேற்று (புதன்கிழமை), கருணாநிதியின் கோபாலபுரம்வீட்டுக்கு வந்தனர்.
இவர்கள் ஒரு ஷிப்டுக்கு 10 பேர் வீதம் 6 ஷிப்டுகளாக தங்கள் பணியில் ஈடுபட உள்ளனர். அனைவரும் "ஏ.கே.47"துப்ாபக்கி ஏந்திய வண்ணம் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். கருணாநிதி எங்கு சென்றாலும் அவரது காருக்கு முன்னும்பின்னும் 2 கார்களில் செல்வர்.
மேலும் கருணாநிதி பயணம் செய்ய விரைவில் குண்டு துளைக்காத கார் ஒன்றும் வழங்கப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications