பாளை சிறையில் கைதிகளுக்குப் பரீட்சை
பாளையங்கோட்டை:
கைதிகளுக்கு கல்வியின் மகத்துவத்தை விளக்கி அவர்களிடம் இருக்கும் குற்ற உணர்ச்சியைப் போக்கும்நோக்கத்துடன், பாளையங்கோட்டை சிறையில் உள்ள 33 கைதிகள் பல்கலைக்கழகத் தேர்வு எழுதஅனுமதிக்கப்பட்டனர்.
தேர்வு எழுதிய 24 பேரில், 17 பேர் வரலாற்றுப் பாடத்தையும், 3 பேர் தமிழ் பாடத்தையும், மற்ற 4 பேரும் தமிழ்இலக்கியத்தையும் பயின்று வருகின்றனர்.
இதுபற்றி சிறைத்துறை டி.ஐ.ஜி. ராமன் கூறும்போது:
இதுவரை கைதிகளின் படிப்புக்காக ரூ.66,850 செலவிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஒன்றிரண்டு கைதிகள் போலீஸ்பாதுகாப்புடன் வெளியில் சென்று தேர்வு எழுதினார்கள். இப்போது சிறைக்கு உள்ளேயே அந்த வசதிஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சிறையை காடு போலில்லாமல் ஒரு அமைதிப் பூங்காவாக்கவே நான் விரும்புகிறேன். டெல்லி திஹார்சிறையில், பிரபல போலீஸ் அதிகாரி கிரண்பேடி செய்தது போலவே, பல சீர்திருத்தங்களைச் செய்வதற்குஆர்வத்துடன் இருக்கிறேன் என்றார் ராமன்.
இந்தத் தேர்வை நடத்தியவர் டாக்டர். பால்ராஜ் என்பவர். இவர் ஆயுள் கைதியாக இருந்து பேராசிரியரானவர்என்பது குறிப்பிடத் தக்கது.












Click it and Unblock the Notifications