துரோகம் செய்தார் ஜெயா: ராமதாஸ் புகார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

அதிமுக கூட்டணியிலிருந்து பா.ம.க. விலகியதற்கு காரணம் ஜெயலலிதா செய்த நம்பிக்கை துரோகம்தான் காரணம்என அதன் தலைவர் ராம்தாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்த பின் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது ராமதாஸ் தமிழகமுதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக சாடினார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்தது குறித்துக் கேட்டபோது அவர் கூறியதாவது,

அதிமுக கூட்டணியில் இருந்த போது ஜெயலலிதாவுடன் ஒத்துப்போவது கடினமான ஒன்றாக இருந்தது.

இப்போது பா.ம.க.மீண்டும் தே.ஜ.கூட்டணிக்கு இணைந்ததற்கு ஜெயலலிதாவின் அராஜகப் போக்கும் ஒருகாரணம்.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம்.

இதன்மூலம் தமிழகத்தில் குறிப்பிட்ட அளவு தொகுதிகளில் வெற்றி பெறுவதுடன், பாண்டிச்சேரியிலும் ஆட்சியில்பங்குபெறுவோம் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் இருந்தோம்.

ஆனால் ஜெயலலிதா எங்களைக் கேட்காமல் காங்கிரஸ், த.மா.கா., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன்பாண்டிச்சேரியில் ரகசிய உறவை ஏற்படுத்திக் கொண்டாா. இதனால் பாண்டிச்சேரியில் எங்களுக்கு ஒரு இடம்கூடக் கிடைக்கவில்லை.

இதைவிட நம்பிக்கை துரோகம் ஏதும் உண்டா?

பாண்டிச்சேரியில் நாங்கள் வளர்ந்து விடக்கூடாது என்பதற்காகவே ஜெயலலிதா இவ்வாறு செய்தார்.

மேலும் கூட்டணி ஒப்பந்தம் செய்து கொண்டபோது ஒரு ராஜ்ய சபா சீட் தருவதாக சொல்லிவிட்டு பிறகு அதையும்கொடுக்க மறுத்துவிட்டார்.

இவ்வாறு ஜெயலலிதா அரசியல் நெறி தவறி எங்கள் கட்சிக்கு வஞ்சகம் செய்ததால், நாங்கள் அங்கிருந்து விலகி,வாஜ்பாய் தலையில் செயல்படும் நாணயமான கூட்டணியில் இணைந்துள்ளோம்.

இவ்வாறு ராம்தாஸ் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+