For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் தே.ஜ. கூட்டணியில் பா.ம.க.

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தே.ஜ. கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

தன்னிடம் உள்ள 5 எம்.பிக்களையும் அழைத்துக் கொண்டு பா.ம.க. தலைவர் ராமதாஸ் புதன்கிழமை பிரதமர்வாஜ்பாய் மற்றும் தே.ஜ. கூட்டணி ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் ஆகியோரைச் சந்தித்தார்.

அவர்களிடம் பா.ம.க. மீண்டும் கூட்டணியில் சேர விரும்புவதாகத் தெரிவித்தார். ராமதாசின் வேண்டுகோளைஏற்று பா.ம.க. வை மீண்டும் கூட்டணியில் சேர்த்துக் கொண்டனர்.

கடந்த 10 ஆண்டுகளாக தீவிர அரசில் கட்சியாக செயல் பட்டு வரும் பா.ம.க., இதுவரை நடந்த தேர்தல்களில் ஒருமுறை தனித்து போட்டியிட்டது. அடுத்து வந்த தேர்தல்களில் அதிமுகவுடனும், திமுகவுடனும் மாற்றி மாற்றி கூட்டணிவைத்துக் கொண்டு அரசியல் ஆதாயம் பார்த்து வருகிறது.

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கண்டு 27 சீட்டுகள் வாங்யிதில் 21 இடங்களில்வெற்றி பெற்றது. மேலும் பாண்டிச்சேரியிலும் இரண்டரை ஆண்டுகள் பா.ம.க ஆட்சி செய்யும் படி ஒப்பந்தம்செய்யப்பட்டது.

ஆனால் மக்களுக்கு ஒப்பவேண்டுமே.... ஒரு இடம் கூடக்கிடைக்கவில்லை. இதனால் பெருத்த ஏமாற்றம்அடைந்தது பா.ம.க..

இந்நிலையில் "பாண்டிச்சேரியில் பா.ம.க.வின் தோல்விக்கு, காங்கிரசுடன் அதிமுக வைத்திருந்த ரகசிய உறவு தான்காரணம். எங்களை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார்கள்" என்றெல்லாம் பா.ம.க. குற்றம் சாட்டி வந்தது.

கடந்த மாதம் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது அதிமுக ஆட்சிக்குக் கணடனம் தெரிவித்து விட்டுகூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தது.

இந்நிலையில் பா.ம.கவின் பரம எதிரியாகக் கருதப்படும் விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர்திருமாவளவன், கூட்டணியில் பா.ம.க. சேர்ந்தாலும் தங்களுக்குப் பாதிப்பு எதுவும் இருக்காது என்றுதான்கூறியிருந்தார். இருந்தாலும் அந்த அமைப்பு என்ன செய்யப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் நாம்பார்க்க வேண்டும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X