பதவி ஏற்றனர் 6 தமிழக ராஜ்யசபா எம்.பிக்கள்
போலீஸ் கமிஷ்னர் பேட்டி:
சென்னை நகர போலீஸ் கமிஷ்னர் முத்துக் கருப்பண் வியாழக்கிழமை நிருபர்களிடம் கூறுகையில்,
ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரின் பிரதேப் பரிசோதனையில் அவர்கள் சயனைட் விஷத்தால் இறந்ததுதெரியவந்தது. அவர்களின் குடல் பகுதியில் சயனைட் இருந்தது. பூச்சி மருந்து குடித்து அவர்கள் இறக்கவில்லை.
இது சாதாரண தற்கொலை அல்ல. அதற்கு மேலும் ஏதோ நடந்துள்ளது.
இந்த மர்ம சாவுகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. ரமேஷ் எழுதியதாகக் கூறப்படும் இரு கடிதங்களும்தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இன்னும் பரிசோதனை முடிவு வரவில்லை.
இந்த வழக்கு தொடர்பாக ரெளடி பங்க் குமார் சரணடைந்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது என்றார் முத்துக் கருப்பண்.
சென்னை மாநகராட்சியில் ரமேஷ் மூலமாக காண்ட்ராக்ட் பெற்ற காண்ட்ராக்டர் தெய்வசிகாமணி, தமிழகத்தில்அதிமுக ஆட்சி வந்தவுடன் உரிய கமிஷனை ஸ்டாலினுக்குத் தரவில்லை என்றும், அதனால் தான் ரமேஷ் மூலமாகதெய்வசிகாமணியை ஸ்டாலின் கடத்தி மிரட்டினார் என்றும் அதிமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.