பதவி ஏற்றனர் 6 தமிழக ராஜ்யசபா எம்.பிக்கள்
டெல்லி:
தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா எம்.பிக்களும் புதன்கிழமை மாநிலங்களவையில் பதவிஏற்றுக் கொண்டனர்.
அதிமுக சார்பில் நகைச்சுவை நடிகர் எஸ்.எஸ். சந்திரன், கோகுல இந்திரா, காமராஜ், நாராயணன் ஆகியோர்ராஜ்யசபா எம்.பி. ஆனார்கள்.
அதிமுகவின் கூட்டணிக் கட்சியான தமாகா சார்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஞானதேசிகனுக்குராஜ்யசபா எம்.பி. பதவி கிடைத்துள்ளது.
மீதமுள்ள ஒரு ராஜ்யசபா எம்.பி. சீட் திமுகவுக்கானது. நடிகர் சரத்குமார் திமுக சார்பில் இந்த சீட்டைப் பெற்றுராஜ்யசபா எம்.பி. ஆனார்.
இவர்கள் 6 பேருமே போட்டி எதுவும் இல்லாமலேயே மாநிலங்களவைக்கு எம்.பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை (ஜூலை 23ம் தேதி) பாராளுமன்றத்தின் 2 அவைகளும் கூடின.
இதையொட்டி, புதன்கிழமை மாநிலங்களவைக்குச் சென்ற இந்த 6 புதிய எம்.பிக்களும், அங்கு பதவி ஏற்றுக்கொண்டனர்.












Click it and Unblock the Notifications