சென்னையில் டிராபிக் நெரிசலைத் தவிர்க்க நவீன சாதனங்கள்
சென்னை:
சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், போக்குவரத்தை ஒழுங்கபடுத்தவும் தீவிர நடவடிக்கைகள்எடுக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் முத்துக்கருப்பன் தெரிவித்தார்.
அண்ணாசாலை, அண்ணாநகர், தியாகராயர்நகர் போன்ற இடங்கள் சென்னை நகரில் போக்குவரத்து நெரிசல்மிகுந்த பகுதிகளாகும். இந்தப் பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்கபடுத்த பல நவீன சாதனங்களோடு புதியநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இது பற்றி சென்னை நகர போலீஸ் கமிஷ்னர் முத்துக்கருப்பன் கூறியதாவது:
சென்னையின் முக்கிய சாலைகளில் சாலைத் தடுப்பான், தற்காலிக வேகத்தடை போன்றவை பயன்படுத்தப்படும்.நோ பார்க்கிங் ஏரியாவைப் பிரித்துக் காட்ட ரப்பராலான ஒளிரும் தன்மை கொண்ட கூம்புகளும்பயன்படுத்தப்படும்.
மேலும், குடித்து விட்டு ஓட்டுபவர்களைக் கண்டுபிடிக்க நுகரும் சாதனம், அதிவேகமாகவும் இடித்துக் கொண்டும்செல்பவர்களைக் கண்டறியும் சாதனம் மற்றும் விபத்துகளில் சிக்கியவர்களுக்கு முதலுதவிப் பெட்டி ஆகியவையும்வாங்கப்பட்டுள்ளன.
இவையனைத்தும் ஒரு இரு சக்கர வண்டியில் (டூவீலர்) பொருத்தப்பட்டு, சென்னை முழுவதும் வலம் வரும்.இதற்காக ஹீரோ ஹோண்டா நிறுவனம் 2 பைக்குகளை இலவசமாக வழங்கியுள்ளது. ஒவ்வொன்றும் ரூ.1 லட்சம்மதிப்புடையது. இவை இரண்டும் இதற்காகவே தயாரிக்கப் பட்ட சி.பி.இஸட் வகை பைக்குகள்.
நெரிசல் மிகுந்த அண்ணாசாலை, ஆழ்வார்பேட்டை, அண்ணாநகர், தி.நகர், அமிஞ்சிக்கரை போன்ற இடங்களில்இந்த வண்டிகள் நிறுத்தப்பட்டு பயன்படுத்தப்படும். இதைப்பயன்படுத்தும் முறை குறித்து 140 பேருக்கு பயிற்சிஅளிக்கப் பட்டு வருகிறது. இதன் மூலம் விதிகளை மீறுவோரைக் கட்டுப்படுத்த முடியும்.
சென்னையில் நடக்கும் விபத்துகளில் 70 சதம் பைக்குகளினால் தான் ஏற்படுகிறது. எனவே பைக்கில் செல்பவர்கள்ஹெல்மெட் அணிவது அவர்களின் உயிருக்கு நல்லது என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications