30 சதவிகிதம் அரசு ஊழியர்கள் குறைப்பு: ஜெ. அதிரடி ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் விரைவில் 30 சதவிகித அரசு ஊழியர்கள் வீட்டுக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நலிவடைந்த அரசு நிறுவனங்களை மூடிவிட்டு, அதன் மூலம், அரசு ஊழியர்களின் எண்ணிக்கையையும் 30சதவிகிதம் அளவுக்குக் குறைக்கலாம் என்பது பற்றி, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் வியாழக்கிழமை நடந்தஅமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

தமிழகத்தில் ஏராளமான அரசு நிறுவனங்கள் நலிவடைந்த நிலையில் உள்ளன. இந்த நிறுவனங்களால் அரசுக்குஎந்தவிதமான வருவாயும் கிடைப்பதில்லை என்று அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த நிறுவனங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கக் கொடுக்கும் சம்பளமும் விரயம்தான் என்று கூறியஜெயலலிதா, இந்த நிறுவனங்களை மூடிவிட்டால் என்ன என்றும் அதிரடியாக அறிவித்தார்.

இந்நிறுவனங்களுக்கு மூடுவிழா செய்வதன் மூலம், 30 சதவிகிதம் அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைக்குறைக்கலாம். இவர்களுக்கு சென்று கொண்டிருக்கும் சம்பளப் பணமும் மீண்டும் கஜானாவில் சேருமே என்றநோக்கில்தான் ஜெயலலிதா இந்த அதிரடி ஆலோசனையைக் கூறியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில், பட்ஜெட்டில் இடம்பெரும் புதுத் திட்டங்கள், குடிநீர்ப்பிரச்சனை, அரசின் செலவுகளைக்குறைக்கும் வழிகள் போன்றவை குறித்தும் ஆலோசிக்கப் பட்டது.

ஆண்டுதோறும் 5 லட்சம் பெண்களைத் தேர்வு செய்தல், பிறகு அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில்சிறு தொழில் பயிற்சியளித்தல், தமிழக அரசின் நிதிநிலைமையை மேம்படுத்துதல், அதற்காக அரசு ஊழியர்களுக்குஆகும் செலவைக் குறைத்தல், நலிந்த அரசு நிறுவனங்களை மூடுதல், அரசு அலுவலகங்களில் ஏற்படும்காலியிடங்களை நிரப்பாதிருத்தல் போன்றவற்றை செயல் படுத்துவதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும்அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+