For Daily Alerts
Just In
தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி - பி.பி.ராஜன்
சென்னை:
டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதியாக பி.பி. ராஜன் நியமிக்கப் பட்டுள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றவர் பி.பி.ராஜன்.
ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்ற இவர் தற்போது டெல்லியின் தமிழகப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒரு வருடம் அவர் இப்பதவியில் இருப்பார். இந்தப் பதவிக்கு அமைச்சர் அந்தஸ்து உண்டு.
மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் பாலமாகச் செயல்படடுவதற்காக எம்.ஜி.ஆர். காலத்தில் இப்பதவிஉருவாக்கப்பட்டது.
Story first published: Friday, May 18, 2001, 5:30 [IST]