கோவணமும் ராமதாஸும்: திருமாவளவன் கிண்டல்
சென்னை:
"ராமதாஸ் முன்பு திமுக கூட்டணியிலிருந்து விலகியபோது, கருணாநிதி எங்கள் கோவணத்தை உருவப் பார்க்கிறார்என்றார். இப்போது, திரும்பி வந்திருப்பதால் அம்மணமாக இருக்கவும் தயார் என்பது போலத் தெரிகிறது" என்றுவிடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கிண்டல் செய்தார்.
இவர் இதுகுறித்து நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:
தே.ஜ. முன்னணியில் பா.ம.க. சேரும் என்பது நாங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான். இது எங்களுக்கு அதிர்ச்சிதரவில்லை. எங்களுக்கு தே.ஜ கூட்டணியின் தலைவர் வாஜ்பாயுடனோ, அதன் ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ்பெர்ணான்டசுடனோ நேரடித் தொடர்பு இல்லை.
தமிழகத்தில் தே.ஜ. கூட்டணிக் கட்சிகளுக்குத் தலைமை வகிப்பது திமுக தான். எனவே, பா.ம.க. குறித்து திமுகவின்நிலை என்ன என்பதைப் பொறுத்தே நாங்கள் முடிவெடுப்போம். இதுபற்றி புதுவையில் வருகிற 30- ந் தேதிநடக்கவுள்ள மைய அமைப்பில் விவாதிப்போம்.
மேலும், கருணாநிதிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தாத வண்ணம் நடந்து கொள்வோம். அதே நேரத்தில் எங்களைஆதரிக்கும் தலித் மக்களின் கருத்தை ஒட்டியே எங்கள் முடிவு அமையும்.
கதர் சட்டை போடாதவரை காங்கிரசில் சேர்க்கமாட்டோம் என்று காந்தி கூறினார். அதைப் போல, குடிசையைக்கொளுத்துபவரை பா.ம.கவில் சேர்க்க மாட்டேன் என்று ராமதாஸ் உறுதிமொழி கொடுத்தால் எங்களுக்கு தலித்மக்கள் மத்தியில் வேலையே இல்லை.
ராமதாஸ் முன்பு திமுக கூட்டணியிலிருந்து விலகியபோது, கருணாநிதி எங்கள் கோவணத்தை உருவப் பார்க்கிறார்என்றார். இப்போது, திரும்பி வந்திருப்பதால் அம்மணமாக இருக்கவும் தயார் என்பது போலத் தெரிகிறது என்றுநிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு கிண்டலுடன் திருமாவளவன் பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications