10 லட்சம் ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவுகிறது விப்ரோ
சென்னை:
இந்தியாவின் "நம்பர் 1" சாப்ட்வேர் நிறுவனமான விப்ரோ, 10 லட்சம் ஏழைக் குழந்தைகளின் கல்விக் கண்களைத்திறக்கவிருக்கிறது.
இவர்களுக்கு கல்வியைப் புகட்டுவதற்கு முன் வந்துள்ளது விப்ரோ நிறுவனம். இந்நிறுவனத்தின் தலைவர் அஸீம்பிரேம்ஜியின் பெயரில் நிறுவப்பட்டுள்ள "அஸீம் பிரேம்ஜி பவுண்டேசன்", 10 லட்சம் குழந்தைகளுக்குக் கல்விஅறிவைக் கொடுக்கவுள்ளது.
சென்னையில் உள்ள இண்டியன் இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜியின் பட்டமளிப்பு விழாவில் பேசியபோது,பிரேம்ஜி இந்தத் தகவலைக் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
பணம் எல்லோருக்கும் முக்கியம்தான். பணத்துக்காகத்தான் நாம் எல்லோரும் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் நம்முடைய செலவு போக, பணத்தை வைத்து, நம் சமூகத்துக்கும் உருப்படியாக நாம்எதையாவது செய்தே ஆகவேண்டும் என்று நினைத்தேன்.
அதனால்தான், ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வியறிவைக் கொடுக்க தற்போது முன் வந்துள்ளேன். அடுத்த ஒருவருடத்தில் இந்தத் திட்டம் முழு அளவில் "அஸீம் பிரேம்ஜி பவுண்டேச"னால் செயல்படுத்தப்படும்.
அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியை மட்டுமே வைத்துக்கொண்டு சாப்ட்வேர் தொழில் வீழ்ந்துவிட்டதுஎன்று எவரும் கருத முடியாது. இதனால் சாப்ட்வேர் வல்லுநர்கள் தளர்ந்து போய்விடவும் கூடாது.
இந்தியாவில் சாப்ட்வேர் வல்லுநர்களின் வளர்ச்சியும், திறமையும் உலகில் "நம்பர் ஒன்"-னாகவே கருதப்படுகிறதுஎன்பதை எவரும் மறுக்க முடியாது. இந்தியாவில் இருந்துகொண்டே சாப்ட்வேரை வளர்த்து, தாங்களும் வளர்ந்துமகிழ்வதற்கு வேண்டிய அனைத்தும் நம்மிடமே உள்ளன என்பதை இந்திய சாப்ட்வேர் வல்லுநர்கள் கருத்தில்கொள்ள வேண்டும்.
உலகின் தலைசிறந்த 10 சாப்ட்வேர் நிறுவனங்களுக்குள் ஒன்றாக வருவதற்காகத்தான் தற்போது "விப்ரோ" முழுமூச்சுடன் உழைத்துக் கொண்டிருக்கிறது. அதுதான் எங்களுடைய தற்போதைய கனவும் கூட.
அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் பயின்ற மாணவரின் நினைவாக, அதே பல்கலைக்கழகத்திலேயே அவருக்குநினைவிடம் ஒன்றை நிறுவ முயன்றனர் லேலன்டு ஸ்டான்போர்டு தம்பதியினர். ஆனால், அதற்கு 10 லட்சம்டாலர்கள் செலவாகும் என்று அந்தப் பல்கலைக்கழகத்தின் தலைவர் மதிப்பீடு கொடுத்தார்.
இந்த 10 லட்சம் டாலர்களில் தனியாகவே ஒரு பல்கலைக்கழகத்தை ஆரம்பித்து விடலாமே என்று நினைத்தனர்அந்தத் தம்பதியினர். அதன் விளைவாக உருவானதுதான் அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம்என்று ஒரு கதையைக் கூறி பட்டமளிப்பு விழா உரையை முடித்தார் பிரேம்ஜி.
ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் அஸீம் பிரேம்ஜி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications