சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பொய் பேசுவதை கண்டுபிடிக்கும் கருவி
சென்னை:
குற்றவாளிகள் பொய் பேசுவதைக் கண்டுபிடிக்க, சென்னை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நவீன கருவிஅமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குற்றவாளியும் விசாரணை அதிகாரியும் ஒரு அறையில் இருப்பார்கள். அறையின் பக்கவாட்டிலும்,மேல்பகுதியிலும் கேமராக்களும் மற்றும் சில கருவிகளும் வைக்கப் பட்டிருக்கும். அதற்குப் பக்கத்து அறையில்கம்ப்யூட்டருடன் அந்தக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும்.
முதலில் அதிகாரிகள் குற்றவாளியின் தாய், தந்தை பெயரைக் கேட்பார்கள். அதற்கு குற்றவாளி உண்மையைச்சொல்லித் தான் ஆகவேண்டும். இப்போது குற்றவாளியின் நடவடிக்கைகள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப் படும்.
அடுத்து குற்றம் சம்பந்தப் பட்ட கேள்விகளைக் கேட்பார்கள். இப்போது அவரது நடவடிக்கைகளில் ஏற்படும்மாற்றத்தின் மூலம், குற்றவாளி சொல்வது உண்மையா பொய்யா என்று தெரிந்து விடும். இந்தக் கருவிதமிழ்நாட்டில் முதன்முதலாக சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.