For Daily Alerts
Just In
மருத்துவனையிலிருந்து வீடு திரும்பினார் ஜனாதிபதி
டெல்லி:
உடல்நலக் குறைவாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ஜனாதிபதி கே.ஆர். நாராயணன், சனிக்கிழமைகாலை ஜனாதிபதி மாளிகைக்குத் திரும்பினார்.
இதையடுத்து, "கார்கில் போர் நினைவு தினம்" உள்பட அவர் பங்கு கொள்ளவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் 2நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டன.
மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதன் விளைவாக, ஜனாதிபதி படிப்படியாகக்குணமடைந்து வந்தார். சனிக்கிழமை காலை அவர் பூரண குணமடைந்து, மருத்துவமனையிலிருந்து ஜனாதிபதிமாளிகைக்குத் திரும்பினார்.
ஆனால், அவர் மேலும் சில நாட்களுக்கு முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனைகூறியுள்ளனர் என்று ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
Comments
Story first published: Friday, May 18, 2001, 5:30 [IST]