கருணாநிதி - திருமாவளவன் சந்திப்பு
சென்னை:
முன்னாள் முதல்வர் கருணாநிதியை, விடுதலைசிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் சந்தித்துப் பேச்சுநடத்தினார்.
இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், எங்களுக்கும் தே.ஜ.கூட்டணியின் தலைவர் பிரதமர்வாஜ்பாய்க்கும் நேரடித் தொடர்பு இல்லை. திமுக தலைவர் கருணாநிதிதான் எங்கள் கூட்டணியின் தலைவர். எனவேஅவரது முடிவைப் பொருத்தே எங்கள் நிலைப்பாடு அமையும். வரும் 30-ந்தேதி கூடவிருக்கும் எங்கள் மையக்குழுகூட்டத்தில் இது பற்றி விவாதிப்போம். அதற்கு முன் நான் கருணாநிதியைச் சந்திப்பேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை திருமாவளவன் கருணாநிதியை அவரது கோபாலபுரம் வீட்டில் சந்தித்தார். இதுபற்றிகருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:
திருமாவளவன் தனது கருத்தை என்னிடம் தெரிவித்துள்ளார். பா.ம.க.விவகாரத்தில் நல்ல முடிவு ஏற்படும் என்றுநம்புகிறேன். திருமாவளவன் அமைதிக்காகத்தான் பாடுபடுகிறார். இன்னும் இரண்டொரு முறை நாங்கள்சந்திப்போம்.
அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் பேச இருக்கிறேன். தேவைப்பட்டால் தேசிய ஜனநாயகக் கூட்டணிதலைவர்களின் கூட்டம் கூட்டப்படும் என்று கருணாநிதி கூறினார்.
பின்னர் இதுகுறித்து திருமாவளவன் கூறியதாவது:
எனது நெருடல்களை எங்களது கூட்டணி கட்சித் தலைவரிடம் கூறியுள்ளேன். அவரின் வழிகாட்டுதலின் படிவிடுதலைச் சிறுத்தைகள் செயல்படும்.
சாதி சங்கங்களின் ஒற்றுமைக்காக கருணாநிதி பாடுபட்டுள்ளார். சாதி சமய ஒற்றுமைக்காக அவர் எடுக்கும்முடிவுகளுக்கு நாங்கள் ஒத்துழைப்புத் தருவோம் என்றார்.












Click it and Unblock the Notifications