For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈரோடு அருகே தலையில்லா உடல்: வீரப்பனுடையதா?

By Staff
Google Oneindia Tamil News

ஈரோடு:

ஈரோடு அருகே அத்தானி காட்டுப் பகுதியில் சனிக்கிழமை காலையில் எரிந்த நிலையில் ஒரு தலையில்லாத உடல்கிடைத்ததையடுத்து, அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.

சந்தனக் கடத்தல் வீரப்பனை அதிரடிப்படையினர் தேடி வரும் இந்தக் காட்டுப் பகுதியில், தலையில்லாமல் ஒருஉடல் கிடப்பதாக சனிக்கிழமை காலை வந்த தகவலையடுத்து, அப்பகுதிக்கு போலீசார் விரைந்து சென்றனர்.

இடுப்புக்குக் கீழ்ப்பகுதி முழுவதும் எரிந்துபோன நிலையில் இருந்த அந்த உடல், வீரப்பனுடையகூட்டாளியுடையதாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

வீரப்பனைத் தேடி வரும் அதிரடிப்படை அதிகாரிகளும் சம்பவம் நடந்த இடத்துக்கு உடனடியாக விரைந்தனர்.

இந்த அத்தானி காட்டுப் பகுதியில்தான் வீரப்பன் நடமாட்டம் இருப்பதாகக் கூறப்படுவதால், இந்த உடல்வீரப்பனுடைய உடலாகக் கூட இருக்கலாம் என்று அதிரடிப்படை அதிகாரிகள் கூறிகின்றனர்.

இதையடுத்து, அந்த தலையில்லாத உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மோப்ப நாயுடன் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், இந்தக் காட்டுப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், வீரப்பனைத் தேடும் பணிபாதிக்கப்பட்டிருப்பதாக அதிரடிப்படை அதிகாரிகள் கூறினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X