சென்னை விமான நிலையத்தை வீடியோ எடுத்த 2 இலங்கை வாலிபர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இலங்கையைச் சேர்ந்த 2 வாலிபர்கள் சென்னை விமான நிலையத்தை வீடியோ எடுக்கும் போதுசந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரணசிங்கே மற்றும் விக்கிரம சிங்கே ஆகிய 2 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் நேற்று (சனிக்கிழமை) வீடியோ கேமராவை வைத்து சென்னை விமான நிலைய சுற்றுப் பகுதிகளை படம்எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம்சென்று, ஏன் படம் எடுக்கிறீர்கள் என்று கேட்டனர்.

அதற்கு அவர்கள் 2 பேரும் சிங்கள மொழியில் பதிலளித்தனர். இதனால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.உடனே இதுபற்றி விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் தந்து அந்த 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்களை விசாரித்த போது, அவர்கள் 2 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும், சென்னைத்துரைப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருவதும் தெரிந்தது.

கடந்த வாரம் இலங்கையில் விடுதலைப்புலிகள் நடத்திய குண்டு வெடிப்பில் இலங்கை போர் விமானங்கள் பலஅழிக்கப்பட்டன.

அதனால் கொழும்பு விமான நிலையத்தில் விமானங்கள் இறங்க முடியவில்லை. எனவே, பல விமானங்கள்சென்னை விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.

இந்நிலையில், இவர்கள் ஏன் சென்னை விமான நிலையத்தைப் படமெடுக்க வேண்டும் என்ற சந்தேகம்எழுந்துள்ளது.

இதனால் அந்த இளைஞர்களிடம் போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+