உள்ளாட்சித் தேர்தல்: கட்சியினருடன் மூப்பனார் ஆலோசனை
சென்னை:
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகளுடன்மூப்பனார் ஆலோசனை நடத்தினார்.
இது குறித்து மாவட்டத் தலைவர்களின் கருத்துக்களை அறிய மூப்பனார் தலைமையில் இன்று (திங்கள்கிழமை)ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் த.மா.கா. தேர்தல் பணிக்குழுத் தலைவர் பி.கே.கிருஷ்ணன் உட்பட அனைத்து மாவட்டத் தலைவர்களும்கலந்து கொண்டனர்.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அனைத்து தலைவர்களின் கருத்தையும் மூப்பனார் கேட்டறிந்தார்.
அப்போது கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துக்கள் வருமாறு,
கடந்த 1996-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவுடன் த.மா.கா. கூட்டணி வைத்திருந்தது. அப்போதுத.மா.கா. சார்பில் 36 சதவீத இடங்களில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப்பட்டது. 4000க்கும் மேற்பட்டஉள்ளாட்சி மன்றப் பதவிகளை த.மா.கா. வென்றது.
எனவே, இப்போது அதிமுகவிடமும் அதிக இடங்களை வாங்கி த.மா.கா. போட்டியிட வேண்டும் என்று பலதலைவர்களும் மூப்பனாரிடம் வலியுறுத்தினர்.
த.மா.கா. தலைவர் மூப்பனார் இந்தக் கருத்துக்கள் அனைத்தையும் வழக்கம்போல் அமைதியாகக்கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications