For Daily Alerts
Just In
பொறுத்திருந்து பார்ப்போம்: ஜெ.
சென்னை:
பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக வாஜ்பாய் கூறியிருப்பதைபொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாகூறியுள்ளார்.
கூட்டணிக்குள் நிலவும் குழப்பம் காரணமாக பிரதமர் உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறுகூறி இருக்கக்கூடும் என்றார்.
தமிழகத்தைச் சேர்ந்த 4 காவல்துறை அதிகாரிகளை மத்திய பணிக்கு மாற்றம் செய்வதுதொடர்பான விவகாரத்தில் மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டிய பதில் தயாராகிக்கொண்டிருக்கிறது.
முதலில் மத்திய பணிக்கு இந்த 4 அதிகாரிகளும் எதற்காக தேவைப்படுகிறார்கள்என்பதை மத்திய அரசு விளக்கட்டும்.
மத்திய அரசுக்கான பதில் தயாராகிக் கொண்டுள்ளது. விரைவில் அனுப்பப்படும்என்றார்.
Comments
Story first published: Friday, May 18, 2001, 5:30 [IST]