ஈழ மாநாடு: நெடுமாறனுக்கு நீதிமன்றம் அனுமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பழ. நெடுமாறனின் ஈழத் தமிழர் ஆதரவு எழுச்சி மாநாட்டுக்கு அனுமதி அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம்காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ள்து.

இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சண்முகம் பிறப்பித்தார்.

பழ. நெடுமாறன் கடந்த மே மாதம் 7ம் தேதி சிதம்பரத்தில் ஈழத் தமிழர் எழுச்சி மாநாடு நடத்த திட்டமிட்டுஇருந்தார். மாநாடு நடத்த அனுமதி கேட்ட போது அவருக்கு முதலில் அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனாலும் பின்னர் மாநாடு நடத்த காவல் துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, நெடுமாறன்உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சண்முகம், பழ.நெடுமாறன் கேட்கும் தேதியில் அவருக்கு மாநாடுநடத்த அனுமதி அளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+