For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் ஆகஸ்டு 4ல் தெற்காசிய அமைதி மாநாடு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முதல் முறையாக தெற்காசிய அமைதி மாநாட்டின் ஆண்டு கூட்டம் ஆகஸ்டு மாதம் 4ம் தேதி சென்னையில் நடக்கஉள்ளது. இது 3 நாட்கள் நடைபெறும்.

இது குறித்து பிரபல காந்தியவாதியான நிர்மலா தேஷ்பாண்டே கூறும்போது:

இதில் பல தெற்காசிய நாடுகளிலிருந்து 15,000 பிரதிநிதிகளும் பாகிஸ்தானிலிருந்து 100 பிரதிநிதிகளும்பங்கேற்கவுள்ளனர். பர்மாவிலிருந்தும் பிரதிநிதிகள் வருவார்கள் என்று எதிர்பாபர்க்கப்படுகிறது.

புகழ் பெற்ற அகில இந்திய காந்தீயவாதிகள் மாநாடு அமைப்பாளர்கள்தான் இந்த மாநாட்டையும் ஏற்பாடுசெய்துள்ளனர். வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் மற்றும் சமூக நல அமைப்பின் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில்பங்கேற்கிறார்கள்.

திபெத் மதத் தலைவர் தலாய் லாமா அமைதி மாநாட்டை துவக்கி வைப்பார். மாநாட்டின் நிறைவு நாளான ஆகஸ்டுமாதம் 6ம் தேதி, ஹிரோஷிமா தினமாக அனுசரிக்கப்படும். அன்று மிகப் பெரிய அமைதி ஊர்வலம் நடைபெறும்.அதன் பின் மத்திய பிரதேச முதல்வர் திக் விஜய் சிங் விழாவின் நிறைவு உரையை நிகழ்த்துவார்.

கர்நாடக ஆளுனர் ரமாதேவி, ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கேலோட் மற்றும் மகாராஷ்டிரா முதல்வர்விலாஸ்ராவ் தேஷ்முக் ஆகியோரும் மாநாட்டில் பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளனர். ஜனாதிபதி கே.ஆர்நாராயணன், பிரதமர் வாஜ்பாய் ஆகியோர் இந்த மாநாட்டிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பி உள்ளனர் என்றார்நிர்மலா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X