சொத்துக் குவிப்பு: உச்ச நீதிமன்றத்தில் பொன்னுசாமியின் மனு தள்ளுபடி
டெல்லி:
வருமானதுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம்வழங்கிய தண்டனையை ரத்து செய்யக் கோரி முன்னாள் தமிழக அமைச்சர்பொன்னுசாமி, தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது முந்தைய தி.மு.க. அரசுவழக்கு தொடந்தது. அந்த வழக்கில் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கிசென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து பொன்னுசாமி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.செவ்வாய்க்கிழமை இந்த மனு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த கே.டிதாமஸ், எஸ்.என்.வரைவா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச்பொன்னுசாமியின் மனுவை தள்ளுபடி செய்தது.
திமுக மனு:
பொன்னுசாமி மற்றும் அவரது மனைவி,மகள் மற்றும் உறவினர்கள் மீதும் தான்வருமானத்திற்கு அதிகமாக ரூ. 77 லட்சம் அளவிற்கு சொத்து சேர்த்ததாக திமுக அரசுவழக்குத் தொடர்ந்திருந்தது.
இதில் பொன்னுசாமிக்கு மட்டுமே சென்னை உயர் நீதிமன்றம் சிறை தண்டனைவிதித்தது. மனைவி, மகள், உறவினர்களை விடுவித்திருந்தது.
இதையடுத்து முடக்கப்பட்ட தங்களது சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்றுகோரி இவர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு இருந்தனர். இது குறித்து பின்னர்விசாரித்து தீர்ப்பளிக்கபடும் என நீதிபதிகள் கூறினர்.
பொன்னுசாமிக்கு உயர்நீதிமன்றம் அளித்த தண்டனை குறித்து வரைவா கூறுகையில்,உயர்நீதிமன்ற தீர்ப்பில் எந்த விதமான தவறும் இல்லை என்றார்.