5 ஏழை மாணவர்களுக்கு ரூ.1.25 லட்சம் ஜெ. உதவி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பொறியியல் கல்லூரி மற்றும் பி.பி.ஏ. பட்டப்படிப்பில் சேர்ந்து படிக்க வசதி இல்லாமல் ஏழ்மையில் தவித்து வந்த 5மாணவர்களுக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.1.25 லட்சம் வழங்கி உதவியுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

இது குறித்து, திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பொன்னேரியைச் சேர்ந்த கிரிதரன், அரவக்குறிச்சி முத்துக்குமார், மதுரையைச் சேர்ந்த ராஜா, பழனிமுருகன்ஆகியோருக்கு தமிழகத்தில் இருக்கும் பொறியியல் கல்லூரிகளில் படிக்கவும், திருக்கோயிலூரைச் சேர்ந்தவெங்கடேஷ் திருக்கோயிலூர் கலை அறிவியல் கல்லூரியில பி.பி.ஏ. படிக்கவும் இடம் கிடைத்தும் ஏழ்மைகாரணமாக பணம் கட்ட முடியாமல் கஷ்டப்படுவது முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இவர்கள் 5 பேரும் தாங்கள் சேர அனுமதி பெற்ற கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்காக, முதல்வர் பொது நிவாரணநிதியில் இருந்து தலா ரூ.25,000 வீதம் ரூ.1.25 லட்சம் நிதி வழங்குமாறு முதல்வர் உத்தரவிட்டார்.

இதன்படி, இவர்கள் 5 பேருக்கும் தலா ரூ.25,000ஐ தலைமைச் செயலகத்தில் முதல்வர் நேரில் வழங்கினார் எனஅரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+