மீண்டும் கருணாநிதி கைதா? - சென்னையில் வதந்தியால் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் முதல்வர் கருணாநிதியும், அவரது மகன் மு.க.ஸ்டாலினும் மீண்டும் கைது செய்யப்படப் போகிறார்கள்என்று வதந்தி பரவியதால் திங்கள்கிழமை இரவு சென்னையில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் மீண்டும் கருணாநிதி கைது செய்யப்பட உள்ளதாக திங்கள் இரவு சென்னையில் வதந்தி பரவியது.
நேப்பியர் பாலம் கட்டியதில் நடந்த ஊழல் தொடர்பாக கருணாநிதி, முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன்,சென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட உள்ளதாகவும், மூவரும் கைதுசெய்யப்படுவார்கள் என்றும் தகவல் பரவியது.
இதை அடுத்து கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிற்கு முன் தொண்டர்கள் குவியத் தொடங்கினர். தொண்டர்கள்குவிவதை அறிந்த கருணாநிதி வெளியே வந்து "ஒன்றுமில்லை, வீட்டிற்கு செல்லுங்கள்" என்று கூறினார்.
ஆனாலும் நீண்ட நேரத்திற்கு பிறகுதான் தொண்டர்கள் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications