எஸ்ட்ஸ் நோய்: சேலத்தில் தம்பதி தற்கொலை
சேலம்:
எய்ட்ஸ் நோய் பாதித்ததால், கணவரும் கர்ப்பிணி மனைவியும் தற்கொலை செய்து கொண்டனர்.
இருவரும் மணவாழ்க்கையை சந்தோஷமாக அனுபவித்து வந்தனர். அடிக்கடி வெளியூர் சென்று வரும் வழக்கம்கனகராஜுக்கு உண்டு. இந்நிலையில் வசந்தி கர்ப்பமடைந்தார். இதனால் இந்தத் தம்பதியினர் மிக்க மகிழ்ச்சிஅடைந்தனர்.
இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக கனகராஜுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பல சிகிச்சைகள்மேற்கொண்டார். ஆனால் எதிலும் பலன் கிடைக்கவில்லை.
தொடர்ந்து வயிற்றுப்போக்கு, பசியின்மை போன்றவற்றால் அவதிப்பட்டு வந்தார் கனகராஜ். சேலம் நான்குரோட்டில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக கனகராஜ் சென்றார்.
அங்கு ரத்த பரிசோதனைக்கு பின் அளித்த சிகிச்சையும் பலனளிக்காத காரணத்தால், எய்ட்ஸ் நோய் இருக்கிறதாஎன அறிந்து கொள்வதற்கான ஹெச்.ஐ.வி. பரிசோதனை செய்து கொள்ளுமாறு மருத்துவர் கூறினார்.
அதற்கான பரிசோதனை ஞாயிற்றுக்கிழமை செய்யப்பட்டது. திங்கள்கிழமை பரிசோதனை முடிவு தெரியும் என்றுமருத்துவர் கூறியிருந்தார்.
தனக்கு எய்ட்ஸ் நோய் இருந்து அது தன் மூலமாக தனது மனைவிக்கும் பரவி, கருவில் இருக்கும் குழந்தைக்கும்பரவி இருக்கலாம். இது ஊராருக்கு தெரிந்தால் அவமானம் நேரிடும் என்று பயந்த கனகராஜ் மனைவியுடன்தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
இதுநாள் வரை மறைத்து வைத்திருந்த உண்மையையும் தன் மனைவியிடம் கூறினார். இதைக் கேட்ட வசந்திஅதிர்ந்து போனார். எய்ட்ஸ் நோயோடு அவமானத்தில் சிக்கி வாழ்வதை விட இறந்து போவதே மேல் என்றுகனகராஜின் முடிவிற்கு வசந்தியும் சம்மதித்தார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு படுக்கை அறையில் இருக்கும் உத்திரஇரும்பு கம்பியில் இருவரும் தூக்கு போட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டனர்.
திங்கள்கிழமை காலை நீண்ட நேரமான பின்னும் அவர்கள் எழுந்திருக்காத காரணத்தால் சந்தேகம் கொண்டபக்கத்து வீட்டுக்காரர்கள், கனகராஜின் வீட்டு கதவை தட்டினர். அப்படியும் கதவு திறக்காத காரணத்தால் ஜன்னல்வழியாக பார்த்தபோது அவர்கள் தூக்கில் தொங்கியது தெரியவந்தது.
அதன் பின் கிடைத்த ரத்த பரிசோதனை முடிவிலும் கனகராஜுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுஇருந்தது.
இந்நிலையில் சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் மட்டும் கடந்த 2 மாதங்களில் 4 பேர் எய்ட்ஸ் நோயால்தற்கொலை செய்து கொண்டதாகவும், போலீசாருக்கு தெரிவிக்காமல் உறவினர் பிணங்களை எரித்ததாகவும்தற்போது தெரிய வந்துள்ளது.