ஜெ.-வாழப்பாடி தீடீர் சந்திப்பு
சென்னை:
தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி முதல்வர் ஜெயலலிதாவைஅவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
தேர்தலிலும் போட்டியிடவில்லை. அக்கட்சி தலைவர் வாழப்பாடி ராமமூர்த்திஅரசியலைவிட்டு தற்காலிகமாக ஒதுங்கிக் கொண்டார்.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் பகிரங்கமாக வாழப்பாடிராமமூர்த்தியை காங்கிரசில் இணையுமாறு அழைப்பு விடுத்தார். ராமமூர்த்தியும் அதைஏற்று சோனியவை சந்தித்தார்.
ஆனால், காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்மூப்பனாருக்கு, வாழப்பாடி ராமமூர்த்தியை காங்கிரஸ் சேர்த்துக் கொள்வதைவிரும்பவில்லை என்று தெரிந்ததையடுத்து ராமமூர்த்தியை சோனியா சேர்க்கவில்லை.
இந் நிலையில் வாழப்பாடி ராமமூர்த்தி திடீரென முதல்வர் ஜெயலலிதாவைசெவ்வாய்க்கிழமை போயஸ் தோட்டம் சென்று அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
ஜெயலலிதா முதல்வரானதற்கு வாழ்த்து தெரிவிக்கத்தான் வாழப்பாடி ராமமூர்த்திவந்தார் என்று அ.தி.மு.க. செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது. ஆனாலும் அ.தி.மு.க.கூட்டணியில் சேர வாழப்பாடி ராமமூர்த்தி திடீர் முடிவெடுத்துள்ளதாகவும் அதுதொடர்பாகவே ஜெயலலிதாவை அவர் சந்தித்தாகவும் கூறப்படுகிறது.
அவர் அதிமுகவில் சேர்ந்துவிடவும் கூட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.