இலங்கை சிறையிலிருந்து விடுதலையான மீனவர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இலங்கை சிறையில் இருந்த விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவரை வெடிகுண்டு வழக்கில் போலீசார் கைதுசெய்தனர்.

குணசேகரன் என்ற அந்த மீனவர் கடந்த ஜூலை 18ம் தேதி, இலங்கை கடற் பகுதியில் மீன் பிடித்ததால் இலங்கைகடற்படை வீரர்களால் பிடித்துச் செல்லப்பட்டார்.

கடந்த வாரம் 17 மீனவர்களை இலங்கை அரசு விடுதலை செய்தது. அதில் குணசேகரனும் ஒருவர்.

குணசேகரன் ஏற்கனவே 1998ம் ஆண்டு வெடிகுண்டு வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். பின்னர் அவர்ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அதன் பின் அவர் தலைமறைவாகி விட்டார்.

இந்நிலையில் இலங்கை சிறையில் இருந்து விடுதலையான அவரை, ராமேஸ்வரம் போலீசார் அள்ளிக் கொண்டுசென்று, மீண்டும் சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+