தீவிரவாதிகளை ஒழிக்க போலீசார் தீவிர அக்கறை செலுத்த வேண்டும்: ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தேச விரோதிகளோடு கைகோர்த்துள்ள வீரப்பன் போன்ற பயங்கரவாதிகளை ஒழிப்பதில் போலீசார் தீவிர அக்கறைகாட்ட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சென்னையில் புதன்கிழமை தொடங்கிய கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் தலைமை தாங்கிப்பேசிய ஜெயலலிதா மேலும் கூறியதாவது:

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் சமூக விரோதிகள் மற்றும் தீவிரவாதிகளின் நடமாட்டம் பெருகிவிட்டது.இவர்களை அடக்கி ஒடுக்குவதே போலீசாரின் தலையாய கடமையாகும்.

தேசவிரோத சக்திகளோடு வீரப்பன் கும்பல் கைகோர்த்து திரிகிறது. இவனைப் பிடிப்பதற்காக, அதிரடிப்படைஉதவியுடன் தற்போது இந்த அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மகளிர்க்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து விட்டன. எனவே, தேவைப்படும் இடங்களில் புதிதாகமகளிர் காவல் நிலையங்கள் திறக்கப்படும். மேலும், மகளிர்க்கு உதவுவதற்காகவே தனிப் பிரிவுகளும் காவல்நிலையங்களில் ஏற்படுத்தப்படும்.

பொது மக்களின் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு சமூகப் பொருளாதாரப் பிரச்சனையும் ஒரு முக்கியகாரணமாகும். இத்தகைய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் போலீஸ் அதிகாரிகள் முன் வந்து, மக்களுக்கு உதவிசெய்ய வேண்டும்.

மக்கள் குறைகளைத் தீர்ப்பதில் முன்னுரிமை அளிக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கு சிறப்பு விருதுகள்வழங்கப்படும். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதில் தீவிர முன்னுரிமை அளிக்கப்படும்.

பொதுமக்களின் குடிநீர் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் மாவட்ட கலெக்டர்கள் அதிக அக்கறை காட்ட வேண்டும்.மக்கள் நலத் திட்டங்களை மக்களுக்கே முழுமையாகச் சென்று சேர்ப்பதே மாவட்ட கலெக்டர்களின் கடமையாகும்என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+