மேம்பால ஊழலுக்கு விரைவில் விசாரணைக் கமிஷன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை பெரம்பூரில் திமுக ஆட்சிக் காலத்தில் கட்ட அனுமதிக்கப்பட்ட மேம்பாலபணியில் ஊழல்நடந்துள்ளதாகவும் அதுகுறித்து விசாரிக்க விசாரணைக்கமிஷன் ஒன்றை அமைக்க தமிழக அரசுமுடிவுசெய்துள்ளது.
பெரம்பூர் மேம்பாலப் பணியில் பெருமளவு ஊழல் நடந்துள்ளதாக பல்வேறு மட்டத்திலிருந்து புகார்கள்வந்துள்ளன. இதையடுத்து தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் துரைராஜ், மேம்பாலப் பணிகளை நேரில்பார்வையிட்டு அரசிடம் அறிக்கையளித்தார்.
அதன் அடிப்படையில் விசாரணைக் கமிஷன் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கமிஷனின் தலைவர் மற்றும்உறுப்பினர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று அந்தச் செய்திக்குறிப்பு கூறுகிறது.












Click it and Unblock the Notifications