குஜராத்தில் லேசான பூகம்பம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
குஜராத் மாநிலம் கட்ச்சுக்கு அருகே உள்ள ரான் பகுதியில் புதன்கிழமை காலை 11.50 மணிக்கு லேசான பூகம்பம்ஏற்பட்டது.
இப்போதுதான் அப்பகுதி மக்கள் தங்களை தாக்கிய பூகம்பத்திலிருந்து மீண்டு சகஜ வாழக்கைக்கு திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில், அவர்களை அச்சுறுத்தும் விதமாக, குஜராத்தின் கட்ச் பகுதியில் தற்போது மீண்டும் பூகம்பம்ஏற்பட்டுள்ளது. ரிச்டர் அளவுகோலில் இது 4.2 ஆகப் பதிவாகியது.
இந்தப் பூகம்பத்தில், இதுவரை யாரும் இறந்ததாகவோ அல்லது வேறு ஏதும் சேதமானதாகவோ தகவல்கள் எதுவும்வரவில்லை.
கடந்த வாரமும் இதே பகுதியில் லேசான பூகம்பம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications