For Daily Alerts
Just In
நடிகர் ராஜ்குமார் மனைவி தாளவாடி விஜயம்
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்ற அதே நாளில் தாளவாடியில் உள்ள பண்ணை வீட்டுக்குஅவரது மனைவி பர்வதம்மா வந்திருந்தார்.
கடத்தல் நடந்து ஒரு ஆண்டு முடிவுற்ற நிலையில் நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா அங்கு வந்திருப்பதுகுறிப்படத்தக்கது. அவருக்கு சத்தியமங்கலம் துணைபோலீஸ் சூப்பிரண்டு தலைமையில் துப்பாக்கி ஏந்தியபோலீசார் பாதுகாப்பு அளித்தனர்.
இந்நிலையில் தற்போது வீரப்பன் தனது கூட்டாளிகளுடன் தாளவாடி தலைமலைக் காட்டுப்பகுதியில் திரிவதாகப்போலீசாருக்குத் தகவல் வந்துள்ளது. அதிரடிப்படை போலீசாரின் தேடுதல் வேட்டையும் தீவிரமாகியுள்ளது.
Comments
Story first published: Tuesday, July 24, 2001, 5:30 [IST]