தீவில் தத்தளித்த 8 இலங்கைத் தமிழ் அகதிகள் மீட்பு
Subscribe to Oneindia Tamil
இராமேஸ்வரம்:
இராமேஸ்வரம் கடற்பகுதியை ஒட்டிய ஒரு குட்டித் தீவில் தத்தளித்துக் கொண்டிருந்த 8 இலங்கைத் தமிழ் அகதிகள்மீட்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் இலங்கையின் வடபகுதியிலுள்ள முல்லைத் தீவு மற்றும் ஒட்டத்தொடுவா பகுயிலிருந்துவந்தவர்கள்.
இவர்கள் அனைவரும் தனியார் படகுகளில், ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 15,000 கட்டணம் செலுத்திதமிழகத்துக்கு வந்தனர்.
ஆனால், வரும் வழியில் கடலில் கனத்த மழை பெய்ததால் அனைத்து அகதிகளும் பயங்கர காய்ச்சலால்பாதிக்கப்பட்டனர். இவர்களை படகுக்காரர்கள் ஒரு தீவில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.
உணவோ, மருந்தோ இல்லாமல் நடுக்கடலில் குட்டித் தீவில் காய்ச்சலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தனர் இந்தஅகதிகள்.
இவர்களை வருவாய்த்துறை அதிகாரிகள் அந்தத் தீவிலிருந்து மீட்டு மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications