வாயில் புகுந்த எலி!
கோவை:
வாயைப் பிளந்துகொண்டு தூங்கிக் கொண்டிருந்த வாலிபரின் வாயில் எலி புகுந்து கடித்துக் குதறியது.
வீடுகளில் பழைய பேப்பர்களை எடைக்கு வாங்கி விற்று வருபவர் முத்து (வயது 35). பழைய பேப்பர்கள் குவிந்துகிடக்கும் கிடங்கில் தான் இவர் வழக்கமாக உறங்குவார்.
சில தினங்களுக்கு முன் வழக்கம்போல் எலிகள் நிறைந்த பழைய பேப்பர் கிடங்கில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். வாயை திறந்து கொண்டு தூங்கிக் கொண்டிருந்தார்.
ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அவரது வாயில் ஒரு எலி புகுந்தது. இதை அவர் உணரவில்லை. சிறிது நேரம்வாய்க்குள் விளையாடிய எலி பின்னர் தொண்டைக் குழிக்குள் நுழைய முயன்றது.
உள்ளே நுழைய முடியாததால், அவரது தொண்டயைக் கடித்தது.
அலறிக் கொண்டு எழுந்த முத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். எலியை வெளியில் எடுக்கமுடியாததால், கடித்துக் கொண்டிருக்கும் எலியை விழுங்கிவிட்டார்.
ஆனால், தொண்டைக்குள் போன எலி அவரது சுவாசப் பாதையில் நுழைந்துவிட்டது. அங்கிருந்து உள்ளேயும்போக முடியாமல் வெளியிலும் வர முடியாமல் எலியும் தவித்தது.
உயிருடன் ஒரு எலி சுவாசப் பாதையை அடைத்துக் கொண்டு கடித்துக் கொண்டிருந்ததால் முத்து மூச்சுவிடமுடியாமலும் வலியினாலும் துடித்தார். வாயிலிருந்து ரத்தம் ஒழுகியது.
இதையடுத்து அவரை கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு எடுத்துக் கொண்டு ஓடினர்.
மருத்துவர்கள் உடனடியாக செயல்பட்டு எலியை வெளியே எடுத்தனர். அதற்குள் அந்த எலி செத்துப்போயிருந்தது.
இதையடுத்து முத்து அங்கேயே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு விஷ முறிவு மருந்துகள்கொடுக்கப்பட்டன. வாயின் உள்ளே எலி கடித்ததால் ஏற்பட்ட புண்களுக்கும் மருந்துகள் தரப்பட்டன.
ஓரளவு உடல் நிலை தேறிய முத்து நேற்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.












Click it and Unblock the Notifications