For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விரைவில் பல உண்மைகளை சொல்வேன்: சுதாகரன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

எனது தாத்தா சிவாஜியின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட பின்னர் 7-ம் தேதிக்குப் பிறகு மனம்திறந்து பலஉண்மைகளைக் கூறவுள்ளதாக சுதாகரன் கூறினார்.

முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன். இவர் தனது உதவியாளர் கோபுஸ்ரீதர் என்பவரைத்தாக்கியதாகவும், போதைப்பொருள் வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கிறார்.

மறைந்த நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் பேத்தியைத் தான் இவர் திருமணம் செய்துள்ளார்.

சிவாஜியின் இறுதிச் சடங்கு (16-ம் நாள் காரியம்) வருகிற 5-ம்தேதி நடக்கிறது.

இதில் கலந்துகொள்வதற்காக சுதாகரன் ஜாமீன் கோரியுள்ளார். இந்த மனு இன்று (புதன்கிழமை) உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் கலந்து கொள்வதற்காக சுதாகரன் பாளையங்கோட்டையிலிருந்துசென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

நான் ஆகஸ்டு மாதம் 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை ஜாமீன் கோரியுள்ளேன்.

எனது தாத்தா சிவாஜியின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட பின்னர் 7-ம் தேதிக்குப் பிறகு மனம்திறந்து பலஉண்மைகளைக் கூறுவேன்.

இவ்வாறு சுதாகரன் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X