விரைவில் பல உண்மைகளை சொல்வேன்: சுதாகரன்
சென்னை:
எனது தாத்தா சிவாஜியின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட பின்னர் 7-ம் தேதிக்குப் பிறகு மனம்திறந்து பலஉண்மைகளைக் கூறவுள்ளதாக சுதாகரன் கூறினார்.
மறைந்த நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் பேத்தியைத் தான் இவர் திருமணம் செய்துள்ளார்.
சிவாஜியின் இறுதிச் சடங்கு (16-ம் நாள் காரியம்) வருகிற 5-ம்தேதி நடக்கிறது.
இதில் கலந்துகொள்வதற்காக சுதாகரன் ஜாமீன் கோரியுள்ளார். இந்த மனு இன்று (புதன்கிழமை) உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் கலந்து கொள்வதற்காக சுதாகரன் பாளையங்கோட்டையிலிருந்துசென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
நான் ஆகஸ்டு மாதம் 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை ஜாமீன் கோரியுள்ளேன்.
எனது தாத்தா சிவாஜியின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட பின்னர் 7-ம் தேதிக்குப் பிறகு மனம்திறந்து பலஉண்மைகளைக் கூறுவேன்.
இவ்வாறு சுதாகரன் கூறினார்.