சென்னை வந்த ரயிலில் கிடந்த ஏ.கே.47 துப்பாக்கிகள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னைக்கு வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் அநாதையாகக் கிடந்த 2 ஏ.கே.47 ரக துப்பாக்கிகளும், சிலதுப்பாக்கிக் குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
முதல் வகுப்புப் பெட்டியைச் சுத்தம் செய்து கொண்டிருந்த போது, ஒரு இருக்கையின் கீழே 2 துப்பாக்கிகள்கிடந்ததைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே இதுபற்றி ரயில்வே போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டது. ரயில்வே போலீசார் விரைந்து வந்து அந்தத்துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்தனர்.
அப்போது, அவை ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் என்று தெரிய வந்தது. இவற்றுடன், சில துப்பாக்கிக் குண்டுகளும்ஹரியானா மாநில போலீஸ் யூனிபார்ம் ஒன்றும் கிடந்தன.
அவற்றையும் பறிமுதல் செய்த ரயில்வே போலீசார், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications