ஆந்திராவில் கொத்தடிமைகளாக இருந்த 20 மதுரை சிறுவர்கள் மீட்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை:

ஆந்திர மாநிலத்தில் மிட்டாய், முருக்கு தயாரிக்கும் தொழிற் கூடங்களில் கொத்தடிமைகளாக இருந்த 20 சிறுவர்கள்மீட்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் மதுரையைச் சேர்ந்தவர்கள்.

மதுரையில் "சோகோ" என்ற பொது நல அறக்கட்டடளை செயல்பட்டு வருகிறது. தெற்குத் தெருவைச் சேர்ந்தவாலிபர் மந்தைக்காளை என்பவரை ராஜேந்திரன் என்பவர் ஆந்திராவில் கொத்தடிமையாக நடத்துவதாக "சோகோ"வுக்குத் தகவல் வந்தது.

அதைத் தொடர்ந்து "சோகோ" அமைப்பினர், ஐ.ஏ.எஸ். அதிகாரி டேவிதாரிடம் கடிதம் வாங்கிக் கொண்டு ஆந்திராசென்றனர். அங்கு நெல்லூர் மாவட்ட கலெக்டர் உதவியுடன் போலீஸ் அதிகாரிகளைத் துணைக்கு அழைத்துக்கொண்டு அந்த வாலிபர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தனர்.

ஆனால் அதற்குள் போலீஸ் வரும் தகவலறிந்து மந்தைக்காளையை மதுரைக்கு கொண்டு வந்து விட்டுவிட்டார்ராஜேந்திரன்.

"சோகோ" அமைப்பினர் மேலும் இதுபற்றி விசாரித்ததில் ராஜேந்திரன் போன்று பாலையா மற்றும் பலர் இதுபோல்சிறுவர்களை வைத்து வேலை வாங்கி வருவது தெரிய வந்தது. பிறகு பாலையாவிடம் வேலை செய்து வந்தசேக்பரீத் மற்றும் பாக்யராஜ் ஆகிய 2 சிறுவர்களும் மீட்கப்பட்டன"ர்.

மேலும் ஆந்திராவிலுள்ள ராஜபாளையத்தில் 7 பேரும், நெல்லூரில் 11 பேரும் இவ்வாறு மீட்கப்பட்டனர்.இவர்கள் அனைவரும் முருக்கு மற்றும் மிட்டாய் செய்யும் வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கு வருடத்திற்கு 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாய்தான் சம்பளமாகக் கொடுக்கப்படுகிறது. ஆனால்காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை கடுமையாக வேலைவாங்கி அந்தச் சிறுவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சிறுவர்கள் 20 பேரும் மதுரை அருகே உள்ள உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+