பருவமழை: கொந்தளிக்கிறது குமரிக் கடல்
கன்னியாகுமரி:
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, குமரிக்கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் கடலுக்குள் மீன்பிடிக்க மீனவர்கள் யாரும் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் பலத்த சூறாவளிக் காற்றும் வீசிவருகிறது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கன மழைபெய்து வருகிறது.
சென்னையில் காலையில் கடும் வெயில் அடித்தாலும் பிற்பகலுக்கு மேல் மேகமூட்டமாகவே உள்ளது. எனவேஇன்று இரவு சென்னையில் மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டவிரோத மிருகக் காட்சி சாலை:
கன்னியாகுமரியில் கடலோரப் பகுதியில் சிலர் விலங்குகளைப் பிடித்து சட்டவிரோதமாக மிருகக் காட்சி சாலைநடத்தி வந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
விலங்குகளைப் பிடித்து சிலர் கடலோரமாக அடைத்து வைத்திருந்த சிலர், அந்த விலங்குகளை வைத்துசட்டவிரோதமாக மிருகக் காட்சி சாலை ஒன்றை நடத்தி வந்தனர்.
இத்தகவல் கிடைத்ததும், போலீசார் விரைந்து சென்று இவர்களைக் கைது செய்து, பல்வேறு பிரிவுகளின் கீழ்வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இங்கு பிடிபட்ட விலங்குகள் அனைத்தும் வியாழக்கிழமை சென்னை வண்டலூர் மிருகக் காட்சி சாலையில்அடைக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications