ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்: மத்திய அரசு மீது இளங்கோவன் தாக்கு
சென்னை:
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை மாற்றுவது நாட்டின் ஒருமைப்பாட்டுக்குஊறு விளைவிக்கும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மறைந்த நடிகர் சிவாஜிகணேசனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இந்த மாதம் 6ம் தேதி சென்னை காமராஜர்அரங்கில், தமிழக காங்கிஸ் சார்பில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமிமுன்னிவை வகிக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பல கட்சித் தலைவர்களும் சம்மதித்துள்ளனர். அ.தி.மு.கவும் இந்த நிகழ்ச்சியில்பங்கேற்க சம்மதித்து உள்ளது.
மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அதிகாரிகளை, அதிலும் குறிப்பிட்ட அதிகாரிகளைஅவர்கள் விருப்பத்துக்கு எதிராக மத்திய அரசு மாற்ற முயல்வது சரியல்ல.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இது போல் செய்படுவது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும்.இது விமர்சனத்திற்கும் உள்ளாகும்.
பிரதமர் வாஜ்பாய் நாட்டை ஆள முடியாமல் தவிக்கிறார். தனது கூட்டணி கட்சியினரை திருப்திப்படுத்துவதேவாஜ்பாயின் முழு நேர பணியாக உள்ளது.
மிகவும் எதிர்பார்ப்புடன் பேசுப்பட்ட ஆக்ரா உச்சி மாநாடு தோல்வி அடைந்ததால் மக்கள் வேதனையுடன்உள்ளனர். இதைத் தெரிந்து கொண்டுதான் வாஜ்பாய் தான் ராஜினாமா செய்வதாக கூறி உள்ளார்.
கூறியதோடு நிறுத்திக் கொள்ளாமல் அவர் ராஜினாமா செய்தால், இந்தியக் குடிமகன் என்ற வகையில் அவரைப்பாராட்ட நான் கடமைப்பட்டு உள்ளேன் என்றார்.












Click it and Unblock the Notifications