காவல்துறையை நவீனப்படுத்த ரூ. 210 கோடி கேட்கிறார் ஜெ.
சென்னை:
தமிழ்நாடு காவல்துறையை நவீனப்படுத்த ரூ.210 கோடி ஒதுக்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர்ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாநாட்டில் தொடக்க உரையாற்றிய முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு காவல்துறையை நவீனப்படுத்த பல புதியதிட்டங்களை அதிமுக அரசு மேற்கொள்ளும் என்று கூறினார்.
மாநாட்டில் அவர் பேசியதாவது,
தமிழ்நாடு காவல்துறையை நவீனப்படுத்தும் திட்டத்திற்காகும் செலவில் பாதியை தமிழகம் ஏற்றுக் கொள்ளும்.பாதி செலவை ஏற்றுக் கொள்ள மத்திய அரசிடம் கேட்கப்பட்டிருக்கிறது. இதற்காக மத்திய அரசிடம் ரூ. 210 கோடிநிதியுதவி கேட்கப்பட்டிருக்கிறது.
உலகத்தில் தலைசிறந்த போலீஸ் துறையுடன் ஒப்பிடும் அளவுக்கு தமிழகப் போலீஸ் துறையை நவீனப்படுத்தி,மிகச் சிறந்த படையாக அதை மாற்றுவதே எங்கள் நோக்கமாகும்.
மேலும் போலீசாருக்கு நவீன யுக்திகளைப் பற்றி பயிற்சியளித்தல், மோப்ப நாய்ப்படை, கணினிமயமாக்கல்,இன்டர்நெட் குற்றம் பற்றி பயிற்சியளித்தல், குற்றப் புலனாய்வுத்துறையை மேம்படுத்துதல், கருப்புப்பூனைப்படைப் பயிற்சி மற்றும் அத்தியாவசிய கருவிகளை வழங்குதல் போன்ற திட்டங்களை அதிமுக அரசுமேற்கொண்டு வருகிறது.
சிறைத்துறை மற்றும் தீயணைப்புத் துறைகளில் பல மறுமலர்ச்சித் திட்டங்கள் புகுத்தப்படும். இதற்கான முறையானஅறிவிப்பு வரவிருக்கும் பட்ஜெட்டில் வெளியிடப்படும்.
குறைந்து வரும் போலீசாரின் எண்ணிக்கையை குறிப்பாக பெண் போலீசாரின் எண்ணிக்கையை அதகிரிக்கவும்தேவையான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா மாநாட்டில் கூறினார்.












Click it and Unblock the Notifications