Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோலாப்பூரில் இன்று பூகம்பம்

Subscribe to Oneindia Tamil

கோலாப்பூர்:

மஹராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் நகரில் இன்று (வியாழக்கிழமை) காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் 26-ம் தேதி குஜராத் மாநிலம் புஜ் நகர், அகமதாபாத் மற்றும் சில நகரங்களில் ஏற்பட்டபூகம்பத்தில் 25,000 பேருக்கு மேல் பலியானார்கள் என்பதை உலகம் அறியும்.

அதற்குப் பிறகும் அடிக்கடி சிற்சில பூகம்பங்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன. இந்தியாவில் குறிப்பாக வடமாநிலங்களில்தான் இவை ஏற்படுகின்றன.

குஜராத் மாநிலம் கட்ச் வளைகுடாவில் கடந்த வாரம் ஏற்பட்ட லேசான அதிர்வு 4.0 ரிக்டர் பதிவாகியிருந்தது. அதேபகுதியில் நேற்று (புதன்கிழமை) ஏற்பட்ட அதிர்வு 4.3 ரிக்டர் அளவு பதிவாகியிருந்தது. ஆனால் இந்த 2 நிலஅதிர்வுகளிலும் எந்தச் சேதமும் ஏற்படவில்லை.

இந்நிலையில், மஹராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் வியாழக்கிழமை காலை 9.38 மணியளவில் லேசான பூகம்பம்ஏற்பட்டது. இந்த அதிர்வு ரிச்டர் ஸ்கேலில் 4.0ஆக பதிவாகியிருந்தது.

55 வினாடிகள் நீடித்த இந்தப் பூகம்பம், சாண்டோலி அணையிலிருந்து ஏறத்தாழ 20 கிலோமீட்டர் சுற்றளவுக்குபரவியிருந்ததாக பூகம்ப ஆராய்ச்சி மையம் கூறுகிறது.

காலை வேளையில் ஏற்பட்டதால் பொது மக்கள் பீதியுடன் இங்கும் அங்கும் தெறித்து ஓடினர். ஆனால்நல்லவேளையாக உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+